states

img

உ.பி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ-அயோத்தியா தேசிய நெடுஞ்சாலையில் பரபன்கி மாவட்டம் ராம் ஷனிகி கட் என்ற பகுதியில்  இன்று அதிகாலை 3 மணியளவில் கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக  கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராம் ஜன்மா அவரது மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.